பெற்ற மகனால் தந்தைக்கு நேர்ந்த கதி : சோகத்தை ஏற்படுத்திய சம்பவம்

மகன் ஒருவர் தனது தந்தையை கட்டையால் கொடூரமாக தாக்கியதில் தந்தை சம்பவ இடத்தில் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இச்சம்பவமானது நேற்று இரவு 12 மணியளவில் குருவிட்ட பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பொஹரபாவ பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளது.

இவ்வாறு உயிரிழந்தவர் பரகடுவ, பொஹொரபாவ பகுதியைச் சேர்ந்த 66 வயதுடைய வர் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

குடிபோதையில் வந்த மகன் அவரது மனைவியை தாக்கிய போது அவரை காப்பற்ற முற்பட்ட தந்தையை தடியால் தாக்கிய கொலை செய்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

இந்நிலையில் கொலையுடன் தொடர்புடைய 34 வயதுடைய சந்தேகநபர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளதுடன் மேலதிக விசாரணைகளை குருவிட்ட பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.