நாட்டில் எரிபொருள் பற்றாக்குறையை தீர்ப்பதற்காக சில வாகனங்களின் பாவனைக்கு கட்டுப்பாடு!

இலங்கையில் எரிபொருள் நெருக்கடியை தீர்ப்பதற்காக சில வாகனங்ளின் பாவணையைக் கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக செய்தி வெளியிடப்பட்டுள்ளது.

இதற்கமைய,மோட்டார் சைக்கிள்கள் மற்றும் மிதிவண்டிகளின் பாவனையை ஊக்குவிப்பதற்கும் அதிக எரிபொருள் பாவனையுடன் கூடிய வாகனங்களைக் கட்டுப்படுத்துவதற்கும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இந்த திட்டத்திற்கமைய, பொது போக்குவரத்து மற்றும் சரக்கு வாகனங்களுக்குத் தடையின்றி எரிபொருளை வழங்கவும் கவனம் செலுத்தப்பட்டுள்ளது.