யாழில் இடம்பெற்ற கோர விபத்தில் நபர் ஒருவர் பலி : பொலிஸார் விடுத்த கோரிக்கை!

யாழில் துவிச்சக்கர வண்டி மற்றும் கார் மோதி விபத்துக்குள்ளானதில் துவிச்சக்கர வண்டியில் பயணித்தவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளார்.

இச்சம்பவமானது ஏ9 வீதி கொடிகாமம், கொயிலாமனை சந்திப் பகுதியில் நேற்று மாலை 03 மணியளவில் இடம்பெற்றுள்ளது.

இந்நிலையில் உயிரிந்தவர் தொடர்பில் அடையாளம் காண உதவுமாறும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

சம்பவம் தொடர்பில் தகவல் , தெரிந்தவர்கள் பொலிஸ் நிலைய இலக்கமான 026 – 2050222 என்ற இலக்கத்திற்கு அழைத்து தெரிவிக்குமாறு கோரியுள்ளனர்.

மேலும் விபத்து தொடர்பில் கொடிகாம்ம் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.