தொடருந்தில் ஏற முற்பட்ட இளைஞர் தவறி வீழ்ந்து பலி!

தொடருந்தில் ஏற முற்பட்ட இளைஞர் ஒருவர் தவறி வீழ்ந்து பலியான சம்பவம் மாத்தறை பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்துயுள்ளது.

இச்சம்பவமானது மாத்தறை தொடருந்து நிலையத்தில் நேற்று (17) இரவு இடம்பெற்றுள்ளது.

இவ்வாறு உயிரிழந்தவர் திக்வெல்ல – வெவுருகன்னல பகுதியைச் சேர்ந்த 23 வயதுடைய இளைஞரொருவர் என பொலிஸாரின் விசாரணையில் தெரியவந்துள்ளது.

குறித்த இளைஞர் நேற்றையதினம் மாத்தறையில் இருந்து பெலியத்த நோக்கிப் பயணித்த சாகரிகா தொடருந்தில் ஏற முற்பட்டபோது தவறி விழுந்து தொடருந்தின் அடியில் சிக்கியுள்ளார்.

இதனையடுத்து, மாத்தறை செஞ்சிலுவைச் சங்கத்தின் அதிகாரிகள் மற்றும் அருகில் இருந்தவர்கள் அவரை மீட்பதற்காக முயற்சிகளை மேற்கொண்டனர்.

சுமார் ஒரு மணித்தியாலமாக மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கையை அடுத்து இளைஞன் மீட்கப்பட்டபோதிலும் அவர் உயிரிழந்திருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.