யானை தாக்கி சம்பவ இடத்தில் உயிரிழந்த நபர்!

மோட்டார் சைக்களில் பயணித்த நபரை யானை தாக்கியதில் சம்பவ இடத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இச்சம்பவமானது இன்று திருகோணமலை – கந்தளாய் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பேரமடுவ பகுதியில் இடம்பெற்றுள்ளது.

இவ்வாறு உயிரிழந்தவர் நபர் மெதிரிகிரிய- விஜேபுர பகுதியைச் சேர்ந்த சுனில் (40வயது) என பொலிஸாரின் விசாரணையில் தெரியவந்துள்ளது.

மோட்டார் சைக்கிளில் பயணித்துக்கொண்டிருந்த குறித்த நபரை யானை தாக்கியதாகவும், சம்பவ இடத்திலேயே அவர் உயிரிழந்ததாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

உயிரிழந்தவரின் சடலம் தற்போது மெதிரிகிரிய வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளதாகவும், மேலதிக விசாரணைகளை மெதிரிகிரிய பொலிஸார் மேற்கொண்டு வருவதாகவும் தெரிவிக்கின்றனர்.