யாழில் மீட்கப்பட்ட வயோதிபரின் சடலம் !

யாழ்ப்பாணம், கீரிமலைப் பகுதியில் சந்தேகத்துக்கிடமான முறையில் உயிரிழந்துள்ள நிலையில் வயோதிபர் ஒருவரின் சடலம் இன்று மீட்கப்பட்டுள்ளது.

கீரிமலை, புதிய கொலணி பகுதியைச் சேர்ந்த சங்கிலியன் நடராசா (வயது – 63) என்பவரே சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

இந்தச் சம்பவம் தொடர்பில் காங்கேசன்துறை பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.