பல்வலிக்கு சிகிச்சைப்பெற்று கொடூரமாக மாரிய நடிகை!

கர்நாடக மாநிலம், பெங்களூரு ஜே.பி. நகரைச் சேர்ந்தவர் சுவாதி. இளம் நடிகையான இவர் கன்னட திரைப்படங்களில் நடித்து வருகிறார். இந்நிலையில் சில நாட்களுக்கு முன்பு சுவாதிக்குப் பல் வலி ஏற்பட்டுள்ளது.

இதனால் இவர் ஹெண்ணூரில் உள்ள ஒரு தனியார் பல் மருத்துவமனையில் சிகிச்சைக்குச் சென்றுள்ளார். அங்கு அவருக்கு மருத்துவர், மருந்துக்குப் பதில் ஊசி ஒன்றைக் கொடுத்து அதைச் செலுத்திக் கொள்ளும்படி கூறியுள்ளார். இதனால் சுவாதியும் அந்த ஊசியை செலுத்தியுள்ளார்.

ஆனால், ஊசி செலுத்திக் கொண்ட சில மணி நேரத்திலேயே அவரது முகம் வீங்கியுள்ளது. இதைப்பார்த்து அவர் அதிர்ச்சியடைந்து உடனே மருத்துவரைத் தொடர்பு கொண்டு கேட்டுள்ளார். இதற்கு மருத்துவர், அப்படிதான் இருக்கும் வீக்கம் குறைந்துவிடும் என கூறியுள்ளார்.

ஆனால் தொடர்ந்து முகம் வீக்கத்துடனே இருந்துள்ளது. மீண்டும் மருத்துவமனையைத் தொடர்பு கொண்டபோது உரிய பதிலை யாரும் அவருக்குத் தெரிவிக்கவில்லை. இதையடுத்து மருத்துவமனையின் தவறான சிகிச்சை குறித்து நடிகை சுவாதி குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.