வவுனியாவில் பிக்கப் மோதியதில் ராணுவ வீரர் பலி!

வவுனியா, ஈரப்பெரியகுளம் பகுதியில் பேரூந்தில் இருந்து இறங்கி வீதியை கடக்க முற்பட்ட இராணுவ வீரர் மீது பிக்கப் வாகனம் மோதியதில் இராணுவ வீரர் மரணமடைந்துள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.

நேற்று மாலை (21) இடம்பெற்ற இவ் விபத்து சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது,

முல்லைத்தீவு பகுதியில் உள்ள இராணுவ முகாம் ஒன்றில் பணியாற்றும் இராணுவ வீரர் ஒருவர் விடுமுறையில் வீடு சென்று இ.போ.சபை பேருந்தில் மீண்டும் கடமைக்கு திரும்பிய போது வவுனியா, ஈரப்பெரியகுளம் பகுதியில் உள்ள இராணுவ முகாமில் ஆவணம் ஒன்றை ஒப்படைப்பதற்காக பேரூந்தில் இருந்து இறங்கி வீதியை கடக்க முற்பட்ட போது எதிர் திசையில் வந்த பிக்கப் வாகனம் சாரதியின் கட்டுப்பாட்டை இழந்து இராணுவ வீரை மோதியதில் இராணுவவீரர் 7மீற்றர் தூரம் தூக்கி வீசப்பட்டு படுகாயமடைந்து வவுனியா வைத்தியசாலை கொண்டு செல்லப்பட்ட போதும் அவர் வைத்தியசாலைக்கு கொண்டு வருவதற்கு முன்னரே இறந்து விட்டடதாக வைத்தியர்கள் தெரிவித்தனர்.

விபத்து தொடர்பில் ஈரப்பெரியகுளம் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி சீ.ஐ.சீ.பண்டார தலைமையில் ஈரப்பெரியகுளம் போக்குவரத்து பொலிஸ் பொறுப்பதிகாரி டீ.சீ.எல்.ஜெயவர்த்தன தலையில் பொலிசார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.