பிரதமரின் வீட்டின் முன்னால் திடீரென இடம்பெற்ற போராட்டம்!

கொழும்பில் உள்ள பிரதமர் ரணில் விக்ரமசிங்கவின் இல்லத்திற்கு முன்பாக போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.

இந்த போராட்டத்தில் ஹிருணிகா பிரேமச்சந்திர உள்ளிட்ட பெண்கள் அமைப்புகளின் பிரதிநிதிகள் கலந்து கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

போராட்டம் காரணமாக குறித்த பகுதியில் விசேட பாதுகாப்பு போடப்பட்டுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.