யாழ் கோட்டை அகழிக்குள் மிதந்து வந்த ஆண் ஒருவரின் சடலம்!

யாழ்ப்பாணம் கோட்டை முனீஸ்வரன் கோவிலுக்குப் பின் பகுதியிலுள்ள அகழியில் சடலம் ஒன்று இன்று மீட்க்கப்பட்டுள்ளது.

முனீஸ்வரன் ஆலய பின் பகுதியில் உள்ள அகழியில் சடலம் காணப்படுவதாக இன்று யாழ் பொலிஸாருக்கு கிடைக்க பெற்ற தகவலின் அடிப்படையில் சடலத்தை மீட்க நடவடிக்கை எடுத்தனர்

எனினும் மீட்கப்பட்ட சடலம் அடையாளம் காணப்படாத நிலையில், பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.