தமிழகத்தில் தீக்குளித்த ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட ஈழத் தமிழர்!

தமிழகம் திருச்சி சிறப்பு முகாமில் தடுத்து வைக்கப்பட்டுள்ள ஈழத் தமிழர்கள் தம்மை விடுதலை செய்யக்கோரி நீண்ட நாளாக போராடிக் கொண்டிருக்கும் நிலையில் நேற்றைய தினம் ஒருவர் தீக்குளித்துள்ளார். பலர் வானுயர்ந்த மரங்களில் ஏறி போராட்டத்திலும் ஈடுபட்டனர்.

தீக்குளித்த நிலையில் திருச்சி அரசு மருத்துவமனையில் அனிமதிக்கப்பட்டுள்ளவர் ஆபத்தான நிலையில் சிகிச்சைப் பெற்று வருவதாக அங்கிருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன.

நேற்றைய தினம் தம்மை விடுதலை செய்யக்கோரி 103 ஈழத்தமிழர்கள் போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர். இதில் மூவர் தொடர் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

தம்மை விடுதலை செய்யுங்கள் அல்லது தம்மை கொலை செய்யுங்கள் என கோரி வருகின்றனர்.

இந்நிலையில் தாம் இறந்துவிட்டால் தமது உறுப்புக்களை தமிழக மக்களுக்கு தானமளிக்கவும் ஒப்பந்தமிட்டுள்ளனர்.