இவர்களுக்கு மட்டும் எரிபொருள் விநியோகிக்கப்படும் : ஐ.ஓ.சி வெளியிட்ட அறிவிப்பு!

எரிபொருள் விநியோகம் தொடர்பில் லங்கா ஐஓசி நிறுவனத்தின் முகாமையாளர் குப்தா அறிவிப்பொன்றை வெளியிட்டுள்ளார். அத்தியாவசிய சேவைகளுக்கே எரிபொருள் விநியோகிக்கப்படும் என நேற்றைய தினம் அறிவிக்கப்பட்டிருந்தது.

இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் இந்த கட்டுப்பாடுகளின் கீழ் நேற்று நள்ளிரவு முதல் அத்தியாவசிய சேவைகளுக்கு மாத்திரம் எரிபொருள் விநியோகிக்கும் நடவடிக்கையை முன்னெடுத்துள்ளது.

இந்த நிலையில், தாம் அனைவருக்கும் எரிபொருளை தொடர்ந்து விநியோகிப்பதாக லங்கா ஐஓசி நிறுவனத்தின் முகாமையாளர் இன்று தெரிவித்துள்ளார்.