கொழும்பில் மீண்டும் வெடித்த ஆர்ப்பாட்டம் : பிரதான வீதி முடக்கம்!

கொழும்பு – செத்தம் வீதியை மறித்து போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

அரசாங்கத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து இன்று காலை முதல் குறித்த பகுதியில் போராட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

இந்த நிலையில், செத்தம் வீதியை மறித்து, வீதித் தடையின் மீது ஏறி நின்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இவ்வாறு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட நால்வர் தற்போது கைது செய்யப்பட்டுள்ளதாக அப்பகுதியில் இருக்கும் எமது செய்தியாளர் தெரிவித்துள்ளார்.

தற்போது குறித்த பகுதியில் சிறு குழப்ப நிலை ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.