யாழில் காணாமல் போன முஸ்லிம் சிறுமி : பொலிஸ்நிலையத்தில் முறைப்பாடு!

யாழ்ப்பாணத்தை சேர்ந்த முஸ்லிம் சிறுமி ஒருவர் காணாமல்போயுள்ளதாக யாழ்.பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது, கடந்த 28ஆம் திகதி செவ்வாய்க்கிழமை கடை ஒன்றில் நின்ற சமயம்

சிறுமி காணாமல்போனதாக கூறப்படும் நிலையில் இதுவரை சிறுமி பற்றிய தகவல்கள் வெளியாகவில்லை.

குறித்த சிறுமி யாழ்.கதீஜா பாடசாலையில் தரம் 8ல் கல்வி கற்கின்றமை குறிப்பிடத்தக்கது.