வவுனியா – செட்டிக்குளம் பகுதியில் ஆபத்தான நிலையில் பயணம் செய்த பொதுமக்கள் : கடுப்பில் பேருந்தை இயக்க மறுத்த டிரைவர் !

வவுனியா – செட்டிக்குளம் இடையில் இடம்பெற்று வரும் அரச பேருந்தில் பொதுமக்கள் பாதுகாப்பற்ற நிலையில் பயணம் மேற்கொண்டதால் பேருந்தின் சாரதி பேருந்தைவிட்டு இறங்கினார்.

இச்சம்பவமானது நேற்றையதினம் வவுனியா மற்றும் மன்னார் பிரதாள வீதியில் இடம்பெற்றுள்ளது.

வழமையாக வவுனியா – செட்டிக்குளம் இடையே 06 மணியளவில் இயங்கும் இறுதிப்பேருந்தானது நேற்றையதின்ம வழமைப்போல் பொதுமக்களை ஏற்ற சென்றுள்ளது.

இதனையடுத்து பேருந்து தரிப்பிடத்தில் இருந்து இழுப்பையடியை சென்ற வேளையில் பேருந்தில் அதிகளவானோர் ஏறியுள்ளனர்.

பேருந்தினுள் கூட்டம் ஏறியதையடுத்து வெளியிலும் பயணிகள் தொங்கியபடி ஏறியுள்ளனர்.

இதனால் ஆத்திரமடைந்த பேருந்தின் சாரதி மன்னார் பிரதான வீதியில் பேருந்தினை நிறுத்திவிட்டு இறங்கிச் சென்றுள்ளார்.

இதனால் அப்பகுதியில் அமைதியின்மை ஏற்பட்டுள்ளது. இவற்றையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த பொலிஸார் நிலமையை கட்டுக்குள் கொண்டுவந்தனர்