இன்று இலங்கையை வந்தடையவுள்ள எரிவாயு கப்பல்!

இலங்கைக்கு 3,700 மெட்ரிக் டன் எரிவாயு அடங்கிய கப்பல் இன்று (10-09-2022) பிற்பகல் 3 மணியளவில் வந்தடையவுள்ளது.

சீரற்ற காலநிலை காரணமாக குறித்த கப்பல் நாட்டை வந்தடைவதில் தாமதம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

11ஆம் மற்றும் 16ஆம் திகதிகளில் 3,700 மெட்ரிக் டன் எரிவாயு அடங்கிய 2 கப்பல்கள் நாட்டை வந்தடையும் என லிட்ரோ நிறுவனத்தின் தலைவர் முதித பீரிஸ் குறிப்பிட்டுள்ளார்.

இதற்கமைய இந்த மாதத்துக்குள் 30,000 மெட்ரிக் டன் எரிவாயு நாட்டுக்கு கொண்டு வரப்படவுள்ளது.

ஒரு லட்சம் மெட்ரிக் டன் எரிவாயுவை இறக்குமதி செய்வதற்காக அண்மையில் லிட்ரோ நிறுவனத்தினால் ஒப்பந்தம் ஒன்று கைச்சாத்திடப்பட்டமை குறிப்பிடத்தக்கது.