யாழில் கிணறு ஒன்றில் இருந்து மீட்கப்பட்ட வயோதிபப்பெண்ணின் சடலம்!

யாழில் கிணறு ஒன்றில் இருந்து வயோதிபப்பெண் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இச்சம்பவமானது இன்று மானிப்பாய் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட அராலி வீதி, சங்கானை பகுதியில் உள்ள கிணறு ஒன்றில் இடம்பெற்றுள்ளது.

இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டவர் சங்கானை பகுதியைச் சேர்ந்த 81 வயதான கந்தையா அன்னம்மா என்ற வயோதிப பெண் எனவும் அவர் நரம்புத்தளர்ச்சி நோயினால் பாதிக்கப்பட்டவர் என்றும் “நான் உங்களுக்கு தொந்தரவாக இருப்பதற்கு விரும்பவில்லை” என உறவினர்களிடம் கூறியதாகவும் பொலிஸாரின் ஆரம்பக்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

உடற்கூற்று பரிசோதனைகளுக்காக சடலமானது யாழ். போதனா வைத்தியசாலைக்கு எடுத்துச் செல்லப்படவுள்ளது.

இந்த சம்பவம் தொடர்பில் மானிப்பாய் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.