பிரதமர் ரணில் விக்ரமசிங்கவே அடுத்த தற்காலிக ஜனாதிபதி .?

சிங்கள பிரதமர் ரணில் விக்ரமசிங்கவே அடுத்த தற்காலிக ஜனாதிபதியாக செயற்படுவார் என தகவல்கள் வெளியாகியுள்ளன.

கோட்டாபய ராஜபக்ச இன்று இராஜினாமா கடிதத்தில் கையொப்பமிட்டுள்ள நிலையில் நாளை இராஜினாமா குறித்த உத்தியோகப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

இதனை அடுத்து அடுத்த நாடாளுமன்ற அமர்வின்போது ஜனாதிபதி மற்றும் புதிய பிரதமருக்கான தெரிவு இடம்பெறும் என தெரிவிக்கப்படுகின்றது.