திடீரென அமுலுக்கு வந்த ஊரடங்குச் சட்டம் : புகையிரத பயணிகளுக்கான முக்கிய அறிவிப்பு!

மேல் மாகாணத்தில் உடனடியாக அமுலுக்கும் வரும் வகையில் ஊரடங்கு உத்தரவை அமுல்படுத்தினார் பிரதமர் ரணில் விக்ரமசிங்க.

மேலும் நாடளாவிய ரீதியில் அவசரகால சட்டத்தை பிரகடணப்படுத்துமாறு பொலிஸாரிடம் உத்தரவிட்டுள்ளார்.

இதனைத்தொடர்ந்து புகையிரத பயணிகள் வீடு செல்லும் வரை புகையிரதங்கள் இயங்கும் என இலங்கை புகையிரத திணைக்களத்தின் பொது மேலாளர் தெரிவித்துள்ளார்.