ஜனாதிபதி பதவியில் இருந்து விலகாத கோட்டாபயவை கைது செய்ய நடவடிக்கை!

ஜனாதிபதி பதவியில் இருந்து விலகுவதாக கூறி இன்னமும் விலகாததால் கைது செய்ய நடவடிக்கை எடுத்துள்ளதாக செய்தி வெளியாகியுள்ளது.

அதன்படி பிரித்தானியா நாடாளுமன்றத்தில் சர்வதேச பிடியானை பிறப்பித்து அவரை கைது செய்யுமாறு அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த யோசனையானது நேற்றையதினம் இடம்பெற்ற நாடாளுமன்ற அமர்வில் முன்வைக்கப்பட்டது.

மேலும் லிபரல் டெமாக்ரட் கட்சியின் தலைவர் எட் டேவி(Ed Davey) இந்த யோசனையை முன்வைத்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.