எரிபொருளுடன் நாட்டுக்கு வருகிறது மற்றுமொரு கப்பல் : அதிக கப்பல்கள் வரவுள்ளதாக தகவல்!

நாட்டில் எரிபொருள் பற்றாக்குறையால் தொழிலுக்கு செல்வோர் மற்றும் ஏணையோர் மிகுந்த சிரமத்துக்கு உள்ளானதைத்தொடர்ந்து நாட்டுக்கு தேவையான எரபொருளுடன் கப்பல் வருவதாக இலங்கை பெட்ரோலிய கூட்டுத்தாபணம் வெளியிட்ட அறிவிப்பு பொதுமக்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்த கப்பலானது நாளை இலங்கையை வந்தடையும் என இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் குறிப்பிட்டுள்ளது.

இந்த ஒரு கப்பல் மட்டுமின்றி அடுத்த சில வாரங்களில் நட்டிற்கு சில கப்பல்கள் வரவுள்ளதாக அக்கூட்டுத்தாபனத்தின் தலைவர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.