யாழில் சற்றுமுன் இடம்பெற்ற ரயில் விபத்தில் நபர் ஒருவர் உடல் சிதறி பலி!

யாழில் புகையிரத கடவையில் இடம்பெற்ற விபத்தில் நபர் ஒருவர் உடல் சிதறி பலியாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இச்சம்பவமானது இன்று யாழ்ப்பாணம் – கந்தர்மடம் ஆத்திசூடி பிள்ளையார் ஆலயத்திற்கு அருகில் இடம்பெற்றுள்ளது.

இவ்வாறு உயிரிழந்தவர் மானிப்பாய், ஓட்டுமடம் பகுதியைச் சேர்ந்த சின்னத்தம்பி மகேந்திரராசா என்பவர் என விசரணையின் மூலம் தெரியவந்துள்ளது.

தற்போது நாட்டில் இடம்பெற்ற பொருளாதார சிக்கலினால் குறித்த நபர் தற்கொலை செய்துகொண்டிருக்கலாம் என அங்குள்ளோர் தெரிவித்துள்ளனர்.

மண்வெட்டியால் தாக்கி தந்தையை கொடூரமாக கொலை செய்த மகன் : வெளியான காரணம்!