யாழில் பொலிஸாரால் கைது செய்யப்பட்ட ஆவாக்குழுவின் தலைவன்!

யாழில் இன்றையதினம் பொலிஸார் நடத்திய சுற்றிவழைப்பில் ஆவா குழுவின் தலைவர் மற்றும் முக்கிய ரவுடி ஒருவரும் கைது செய்யப்பட்டுள்ளாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

குறித்த நபர்கள் இன்றையதினம் மருதநார் மடத்தில் சுன்னாகம் பொலிஸார் மேற்கொண்ட சுற்றிவளைப்பில் கைது செய்யப்பட்டுள்ளனர்.

மேலும் அவர்கள் பயண்படுத்திய மோட்டார் சைக்கிள்கள் மற்றும் கத்திகள் அவர்களிடம் இருந்து பரிமுதல் செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.