யாழில் வீடொன்றில் பெட்ரோல் திருடிய மர்ம நபர்கள்!

யாழில் வீடிடொன்றில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மோட்டார் சைக்கிளில் மர்ம நபர்கள் பெட்ரோல் திருடிச்சென்றுள்ளதாக அவ்வீட்டு உரிமையாளர் தெரிவித்துள்ளார்

இச்சம்பவமானது நேற்றையதினம் யாழ் செயலகத்திற்கு அருகில் உள்ள வீடொன்றில் இரவு இடம்பெற்றுள்ளது.

குறித்த பகுதியில் அதிகாலை 02 மணியளவில் வீட்டிற்குள் நுளைந்த இருவர் பைக்கிள் வைத்திருந்த பெட்ரோலை திருடிச்சென்றுள்ளனர்.

அவ்வீட்டில் உள்ள உரிமையாளர் காலையில் மோட்டார் சைக்கிளை இயக்கும்போது வாகனம் இயங்கவில்லை
இதனால் சந்தேகத்தில் கண்காணிப்பு கமராவை பரசோதிக்கையில் இருவர் பெட்ரோலை திருடிச்சென்றுள்ளது தெரியவந்துள்ளது.

இது குறித்தான வீடியோவை வீட்டின் உரிமையாளர் சமூகவளைதலத்தில் பதிவேற்றியுள்ளார்.