எரிபொருளுக்காக வரிசையில் காத்திருந்த உப அதிபர் பலி!

நாட்டின் எரிபொருள் சிக்கல் இன்னும் தீராத வண்ணம் உள்ளதால் பொதுமக்கள் மிகுந்த சிறமத்துக்குள்ளாகின்றனர்.

இந்நிலையில் எரிபொருள் வரிசையில் எரிபொருளுக்காக காத்திருந்த நபர் ஒருவர் மாரடைப்பின் காரணமாக உயிரிழந்துள்ளது பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

இச்சம்பவமானது நேற்றையதினம் இடம்பெற்றுள்ளது.

நீண்ட நேரமாக எரிபொருளுக்கு காத்திருந்த நிலையில் அவர் மாரடைப்பின் காரணமாக இறந்துள்ளார்.

மேலும் குறித்த நபர் பாடசாலை ஒன்றின் அதிபர் என்பது குறிப்பிடத்தக்கது.