யாழில் ஆவா குழு தலைவரை வாளால் வெட்டிய மர்ம குழு!

யாழில் ஆவா குழுவின் தலைவர் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்கதுலில் படுகாயமடைந்த நபர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இச்சம்பவமானது தெல்லிப்பழை ஆதார மருத்துவமனைக்கு அண்மையாக நேற்றையதினம் இடம்பெற்றுள்ளது.

தெல்லிப்பழை ஆதார மருத்துவமனைக்கு சென்று விட்டு திரும்பும் போது குறித் நபர் மீது வாள் வெட்டு தாக்குதல் இடம்பெற்றுள்ளது.

இந்த தாக்குதலை நடத்திய 05 கொணட குழுவினை பொலிஸார் கைது செய்ததாகவும் வாள் ஒன்றும் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இந்த தாக்குதலானது கனி குழுவிற்கும் ஆவா குழுவிற்கும் இடம்பெற்ற மோதலின் காரணமாக இச்சம்பவம் இடம்பெற்றுள்ளதாக தெரியவந்டதுள்ளது.

இத்தாக்குதலில் படுகாயமடைந்த நபர் மேலதிக சிகிச்சைக்காக யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனைக்கு மாற்றப்பட்டுள்ளார்.