யாழ். பல்கலைக்கழகத்தில் இன்று மேற்கொள்ளப்பட்ட கறுப்பு ஜீலை நினைவேந்தல்!

இன்றையதினம் கறுப்பு ஜீலை நினைவு தினத்தின் காரணமான யாழ். பல்கலைக்கழகத்தில் நினைவேந்தல் நிகழ்வு மேற்கொள்ளப்பட்டு இருந்துள்ளது.

கடந்த 1983 ஆம் ஆண்டு தமிழ்களுக்கு எதிரான கலவரத்தில் பல்வேறு தமிழர்கள் பாதிக்கப்பட்டனர்.

அதில் உயிரிழந்தவர்களுக்கு பல்வேறு பகுதிகளில் இன்றையதினம் நினைவேந்தல் அனுஷ்டிக்கப்பட்டு வருகின்றது.

இந்நிலையிலேயே இன்றையதினம் யாழ். பல்கலைக்கழகத்தில் மேற்கொள்ளப்பட்ட நினைவேந்தலில் பல்வேறு மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் கலந்து கொண்டுள்ளனர்.