கூறையில் கட்டியிருந்த கயிறு சிறுவனின் கழுத்தில் சிக்கு இறுகியதில் பரிதபமாக உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
இச்சம்பவமானது நேற்றையதினம் மட்டக்களப்பு பகுதியில் பாரதி வீதியில் இடம்பெற்றுள்ளது.
இவ்வாறு உயிரிழந்த சிறுவன் அப்பகுதியில் உள்ள 11 வயதுடைய மதிவாணன் ஜனுசன் என தெரியவந்துள்ளது.
குறித்த சிறுவன் வீட்டின் முன் வினையாடிக்கொண்டிருந்தான்.
இந்நிலையில் வீட்டின் முன் உள்ள கயிரு ஒன்றில் கழுத்தை நுழைத்து விளையாடியுள்ளார் எதிர்ப்பாராத விதமாக கயிறு கழுத்தில் இறுகி சிறுவன் உயிரிழந்துள்ளார்.
இதனை அடுத்து சடலத்தை மீட்ட பொலிஸார் பிரேத பரிசோதனையின் பின் குடும்பதாறிடம் சடலத்தை ஒப்படைக்கவுள்ளதாக தெரிவித்துள்ளனர்.