கடலோரத்தில் மீட்கப்பட்ட அடையாளம் தெரியாத ஆண் ஒருவரின் சடலம்!

கடலோரத்தில் அடையாளம் தெரியாத ஆண் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இச்சடலமானது இன்று காலை வெள்ளவத்தை கடலோர காவற்படை முகாமிற்கு அருகில் உள்ள கடற்கரையில்
கண்டெடுக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு உயிரிழந்தவர் இன்னும் அடையாளம் காணப்படாத நிலையில் உள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

குறித்த நபர் 35 வயதுக்கும் 40 வயதுக்கும் இடைப்பட்ட வயதுடைய குறித்த நபரின் சடலத்தில் காயங்கள் எதுவும் இல்லை என பொலிஸார் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.