பாடசாலை மாணவர்களுக்கு மகிழ்ச்சி தகவலை வெளியிட்ட கல்வி அமைச்சு!

நாட்டில் தற்போது இடம்பெற்று வரும் போக்குவரத்து சிக்கலின் காரணமாக பாடசாலை மாணவர்களுக்கு தனி பேருந்து வசதி அறிமுகப்படுத்த போவதாக கல்வி அமைச்சு அறிவிப்பொன்றை வெளியிட்டுள்ளது.

தற்போது நாட்டில் வெளிமாவட்டத்தில் இருந்து மற்றும் வெளியூரில் இருந்து வரும் மாணவர்களின் நலன்கருதி இத்திட்டம் ஆரம்பித்துள்ளதாக தெரிவித்துள்ளனர்.

இதன்போது அனைத்து பாடசாலைகளும் உள்ளடங்கும் வகையில் பாடசாலை ஆரம்பமாகும் நேரம் மற்றும் நிறைவ​டையும் நேரம் என்பனவற்றை கவனத்திற்கொண்டு இந்த புதிய பஸ் சேவை முன்னெடுக்கப்படுமென கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.