மட்டக்களப்பில் விமாணப்படை வீரரை மரத்தில் கட்டி வைத்து அடித்து : அந்நியன் பட பாணியில் போர்ட் எழுதி வைத்த மர்ம குழு!

மட்டக்களப்பு விமாணப்படையில் பணிபுறியும் விமாணப்படை வீரரரை மரத்தில் கட்டி வைத்து அடித்து காயமுற்ற நிலையில் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இச்சம்பவமானது மட்டக்களப்பு பகுதியில் நேற்று மாலை இடம்பெற்றுள்ளது.

குறித்த பகுதியில் வீட்டில் இருந்து கடமைக்காக சென்ற விமாணப்படை வீரரரை அடையாளம் தெரியாத மர்ம நபர்கள் அவரை தாக்கியுள்ளனர்.

தாக்கியது மட்டுமல்லாமல் ஆடைகளை அவிழ்த்து மரத்தில் கட்டி வைத்து அடித்துள்ளனர்.

இவற்றினை விமானப்படை ஊடகப் பேச்சாளர் குறூப் கெப்டன் துஷான் விஜேசிங்க இதனை உறுதிப்படுத்தியுள்ளார்.

இதனைத்தொடர்ந்து சந்தேக நபர்கள் விமாணப்படை வீரரரை கட்டி வைத்த மரத்தில் ஒரு இரும்ப தகட்டினை பயன்படுத்தி “முரட்டு அரசியலுக்கு உதவும் கைக்கூலிகள் இப்படித்தான் கொல்லப்படுகிறார்கள்” என தமிழ் மொழியில் எழுதப்பட்டுள்ளது.

சம்மபவம் தொடர்பில் பொலிஸார் மற்றும் விமாணப்படையனியினர் சேர்ந்து விசாரணையில் ஈடுபட்டுள்ளதையடுத்து காயமடைந்த வீரரை மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர்.