யாழில் குடும்பஸ்தரை மிரட்டி பெட்ரோல் கேட்ட பொலிஸ் அதிகாரி பணி நீக்கம்!

யாழில் குடும்பஸ்த்தர் ஒருவரை மிரட்டி பெட்ரோல் கேட்ட பொலிஸாரை பணியில் இருந்து நீக்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இச்சம்பவமானது யாழ்.பருத்தித்துறை பகுதியில் இடம்பெற்றுள்ளது.

குறித்த பகுதியில் பணியில் இருந்த பொாலிஸார் பெட்ரோல் நிரப்பு நிலையத்திறகு சென்று குடும்பஸ்த்தரான ஊழியரை மிரட்டி பெட்ரோல் தருமாறு கூறியுள்ளார்.

இந்த சம்பவம் கடந்த புதன் கிழமை இடம்பெற்றுள்ளது.

இதனால் அந்நபர் பருத்தித்துறை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரிக்கு தொலைபேசி வாயிலாக இவ்வாறு ஒரு உத்தியோகத்தர் வந்து தொல்லை ஏற்படுத்தி தருவதாக புகார் அளித்துள்ளார்.

அதனையடுத்து விசாரணை செய்த அதிகாரி அப் பொலிஸ் உத்தியுகத்தரை அடையாளம் கண்டுள்ளனர்.

இந்நிலையிவ்

சம்பவம் தொடர்பாக ஆராய்ந்த பொறுப்பதிகாரி நீதிமன்ற பாதுகாப்புக்கு அனுப்பப்பட்ட பொலிஸ் உத்தியோகஸ்த்தர் ஒருவர், எரிபொருள் நிரப்பு நிலையத்திற்கு சென்றிருப்பதை அறிந்து கொண்டனர்.