பேருந்து கட்டணங்கள் குறைப்பு : வெளியானது பொதுமக்களுக்கு மகிழ்ச்சி செய்தி!

இலங்கையில் தற்போது நடைமுறையில் இருக்கும் பேருந்தின் கட்டணங்கள் குறைக்கப்பட்டுள்ளதாக தேசிய போக்குவரத்து ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

சில தினங்களுக்கு முன் டீசலின் விலை குறைக்கப்பட்டதன் காரணமாகவே இச்செயல்முறை நடைமுறைப்படுத்தபோவதாக தெரிவித்துள்ளனர்.

இதனை இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே ஆணைக்குழுவின் பணிப்பாளர் கலாநிதி நிலான் மிரேண்டா தெரிவித்துள்ளார்.

மேலும் பேருந்தின் கட்டணம் குறைக்கப்பட்ட விதம் தொடர்பில் இன்று பிற்பகல் அறிவிக்கப்படும் தெரிவித்துள்ளார்.