எரிபொருளுக்காக கர்ப்பிணியாக நடித்த பெண் வசமாக சிக்கினார்!

இலங்கையில் எரிாபருள் சிக்கல் அதிகமானதையடுத்து பலர் சில மோச வேலைகளில் ஈடுபட்டு வருகின்றனர் அந்தவகையில் எரிபொருள் பெருவதற்காக கர்ப்பிணி போல் நடித்த பெண் அவரின் நாடகம் அம்பலமாகியுள்ளது.

இச்சம்பவமானது இன்று பிங்கிரிய எரிபொருள் நிலையத்தில் இடம்பெற்றுள்ளது.

குறித்த எரிபொருள் நிலையத்தில் வயிற்றில் தலையணையை கட்டிக்கொண்டு மோட்டார் சைக்கிளுக்கு எரிபொருள் நிரப்புவதற்காக எரிபொருள் நிலையத்திற்கு பெண் ஒருவர் வந்துள்ளர்.

எரிபொருள் நிலையத்தில் எரிபொருள் பெருவதற்கு மோட்டார் சைக்கிள்கள் ஒரு வரிசையிலும் வாகனங்கள் ஒரு வரிசையிலும் இருந்துள்ளது.

இதனைத்ததொடர்ந்து சுகாதார ஊழியர்கள் மற்றும் தாய்மார்கள், அரச ஊழியர்கள், கர்ப்பிணி பெண்கள் ஆகியோருக்கு தனித் தனி வரிசை காணப்பட்டுள்ளது.

இதனை அறிந்ந அப்பெண் வயிற்றில் தலையணையை கட்டிக்கொண்டு கர்ப்பிணிபோல் வந்து எரிபொருள் பெற்றுக்கொண்டார்.

இதனையடுத்த பெட்ரோலை பெற்றுக்கொண்டு வீதியில் மோட்டார் சைக்கிளில் திரும்பும் வேளையில் தவறி விழுந்துள்ளார் இதனனால் வயிற்றில் இருந்த தலையணையும் விழுந்துள்ளது.

இதனையறிந்த பொலிஸார் பெண்ணை கடுமையாக எச்சரித்து அனுப்பிவைத்துள்ளனர்.

மேலும் சம்பவத்தை அடுத்து அந்தப் பெண் வெட்கத்தில் கூனிக்குறுகியபடி தலையணையை எடுத்துக்கொண்டு மோட்டார் சைக்கிளில் விரைந்து சென்றதாகவும் கூறப்படுகின்றது.