கம்பஹா, கெஹல்பத்தர பிரதேசத்தில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் 22 வயதுடைய இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இதேவேளை, வத்தளை டிகோவிட்ட கடற்கரையில் இரண்டு கைகளும் கால்களும் கட்டப்பட்ட நிலையில் அடையாளம் தெரியாத ஆண் ஒருவரின் (35 முதல் 40 வயது வரை) சடலம் ஒன்று கண்டெடுக்கப்பட்டுள்ளது.