யாழில் 06 பேருக்கு கொராணா தொற்று உறுதி : இருவர் மரணம்!

யாழில் போதனா வைத்தியசாலையில் 06 பேர் கொராணா தொற்று உறுதியான நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் இருவர் உயிரிழந்துள்ளதாகவும் அங்கிருந்து கிடைக்கப்பெறும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

குறித்த வைத்தியசாலைக்கு வரும் நோயானர்களிடம் மேற்கொள்ளப்பட்ட பரிசோதைனையின் அடிப்படையில் கொராணா தொற்றாளர்கள் இனங்காணப்பட்டனர்.

இவர்கள் கொராணா தடுப்பூசியை ஒரு வருடத்திற்கு முன் பெற்றுக்கொண்டுள்ளதாக பிரதிபணிப்பாளர் தெரிவித்துள்ளார்.

மேலும் கடந்த ஜூலை மாதம் கொரோனா தொற்றால் யாழ்ப்பாணத்தில் இருவர் உயிரிழந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.