(STF) காவலில் இருந்த கிரிமினல் கல்குவாரி குழி ஒன்றில் தவறி விழுந்து பலி!

பொலிஸ் விஷேட அதிரடிப்படையின் (STF) காவலில் இருந்த கிரிமினல் கும்பல் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

பொலிஸாரின் கூற்றுப்படி, சந்தேகநபர் மீது கொலைக் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டு அவர் STF காவலில் வைக்கப்பட்டார்.

நவகமுவ பகுதியில் உள்ள கல்குவாரி குழி ஒன்றில் தவறி விழுந்து குற்றவாளி உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

சந்தேக நபர் துவான் எனப்படும் பாதாள உலக உறுப்பினர் ஷிரார் என அடையாளம் காணப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

அங்கொட பிரதேச சபை உறுப்பினர் சுமுது ருக்ஷானின் கொலை உட்பட பல கொலைகளுடன் இவர் தொடர்புடையவர் என தெரிவிக்கப்படுகிறது.

கடுவெல கொரத்தோட்ட பகுதியில் மறைத்து வைக்கப்பட்டிருந்த ஆயுதங்களை கண்டுபிடிக்க STF அதிகாரிகள் அழைத்துச் சென்ற போது துவான் கல்குவாரியில் விழுந்து உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.