கைக்குழந்தையுடன் தமிழகத்திற்கு சென்ற 8 இலங்கையர்கள்!

இரண்டு மாத கைக்குழந்தை உட்பட 8 பேர் இலங்கையில் இருந்து அகதிகளாக தமிழகம் வந்துள்ளனர்.

கடந்த 3 நாட்களுக்கு முன்பு அந்த 8 பேரையும் படகுக்காரர்கள் மூன்றாவது மணல் திட்டு பகுதியில் இறக்கிவிட்டனர்.

இந்நிலையில் இன்று (21-08-2022) அதிகாலை 2 மாத குழந்தை உட்பட 8 பேரை தமிழக கடலோர காவல் துறையினர் மீட்டனர்.

அத்துடன் கிளிநொச்சி மற்றும் யாழ்ப்பாணம் பகுதிகளைச் சேர்ந்த மக்களே இவ்வாறு மீட்கப்பட்டுள்ளனர்.

மீட்கப்பட்டவர்கள் மண்டபம் அகதிகள் மறுவாழ்வு முகாமில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

இதன்படி இலங்கையில் இருந்து தமிழகம் வந்தடைந்த அகதிகளின் எண்ணிக்கை 134 ஆக அதிகரித்துள்ளது.