எரிபொருள் நிரப்பு நிலையங்களில் மீண்டும் வரிசை உருவாகும் அபாயம்!

எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கு வாரந்தோறும் எரிபொருள் விநியோகம் குறைவடைந்துள்ளமையினால், மீண்டும் எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கு அருகில் வரிசையில் காத்து நிற்கும் நிலை ஏற்பட்டுள்ளதாக பெற்றோலிய விநியோகஸ்தர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

பெற்றோலை பெறுவதற்காகவே இவ்வாறான வரிசைகள் அமைக்கப்படுவதாக சங்கம் மேலும் சுட்டிக்காட்டியுள்ளது

ஐ.ஓ.சி. ஒன்றியத்தின் இணைச் செயலாளர் கபில நாவுதுன்ன தெரிவித்தார்.

எரிபொருள் நிரப்பும் நிலையங்கள் எவ்வித சிக்கலும் இன்றி எரிபொருளை வழங்கக்கூடிய நிலையில், சிபெட்கோ எரிபொருள் நிரப்பு நிலையங்கள் மட்டும் எரிபொருள் வழங்குவதில் சிக்கல்களை எதிர்கொள்கின்றன.

எரிபொருள் நிரப்பு நிலையங்களினால் ஏற்படும் குறைபாடுகளை தவிர்க்கும் வகையில் QR அமைப்பின் ஊடாக எரிபொருள் விநியோகம் எவ்வாறு மேற்கொள்ளப்படுகிறது என்பதை எரிபொருள் நிரப்பு நிலையங்களின் உரிமையாளர்களுக்கு விரைவாக அறிவிக்கும் பொறிமுறையொன்றை வழங்குமாறு அமைச்சரிடம் கோரிக்கை விடுக்கப்படுவதாகவும் அவர் கூறினார்.

இதேவேளை, எரிபொருளை பெற்றுக்கொள்ள மக்கள் வருவதில்லை என்பதும் இதன் விலையேற்றமே பிரதான காரணம் என்பதும் தெளிவாகத் தெரிகின்றது என பெற்றோல் நிலைய உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் குமார ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

இதேவேளை, எரிபொருள் இறக்குமதிக்கான மாதாந்த செலவு 500 மில்லியன் அமெரிக்க டொலர்களில் இருந்து 230 மில்லியன் அமெரிக்க டொலர்களாக குறைந்துள்ளதாக மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சு தெரிவித்துள்ளது.

600,000க்கும் அதிகமான வாகனங்கள் தேசிய எரிபொருள் அனுமதிப்பத்திரம் பெற பதிவு செய்யப்பட்டுள்ளன. மேலும் இந்த முறை அறிமுகப்படுத்தப்பட்டதன் மூலம் தேசிய அளவில் சேமிப்பு ஏற்பட்டுள்ளதாக அமைச்சுக்கள் சுட்டிக்காட்டுகின்றன.

மேலும், தற்போது எரிபொருள் பாவனை இரண்டு மடங்காக குறைக்கப்பட்டுள்ளதாக இலங்கை பெற்றோலிய சட்டக் கூட்டுத்தாபனத்தின் உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

எரிபொருள் நெருக்கடியின் உச்சத்தில், நாளொன்றுக்கு கிட்டத்தட்ட 4,500 மெட்ரிக் டன் பெட்ரோல் பயன்படுத்தப்பட்டது, அது இப்போது 2,000 மெட்ரிக் டன்னாகக் குறைந்துள்ளது.

அக்காலப்பகுதியில் 6,600 மெற்றிக் தொன் டீசல் பயன்படுத்தப்பட்ட போதிலும், தற்போது டீசலின் அளவு 3,000 மெற்றிக் தொன் குறைந்துள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.