தமிழ்நாட்டில் இலங்கை அகதி பலி : வெளியான காரணம்!

தமிழ்நாடு நாகியம்பட்டி இலங்கை ஏதிலஸ் முகாம் பணியாளர் உத்தமசீலன் (வயது 40) என்பவர் தாமம்பட்டி போக்குவரத்து பணிமனை முன் சாலையை அகலப்படுத்துவதாக கூறி நூற்றாண்டு பழமையான புளியமரத்தை வெட்டி அகற்றும் பணியில் ஈடுபட்டுள்ளார்.

அப்போது எதிர்பாராதவிதமாக உத்தமசீலன் மீது மரம் விழுந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

அங்கிருந்தவர்கள் உடனடியாக மரத்தை அகற்றி அவரது உடலை மீட்டு அங்கிருந்து 500 மீட்டர் தொலைவில் உள்ள போக்குவரத்து பணிமனைக்கு செல்லும் சாலையில் வைத்தனர்.

இதுகுறித்து தகவல் அறிந்த தாமம்பட்டி போலீசார் மற்றும் வருவாய்த்துறையினர் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். விசாரணையில் மரத்தை வெட்டி அகற்ற உரிய அனுமதி பெறவில்லை என்பது தெரியவந்தது.

அனுமதியின்றி மரத்தை வெட்டி உத்தமசீலனின் சடலத்தை மூடி மறைத்ததாகவும் கூறப்படுகிறது. இதையறிந்த இலங்கை ஏதிலிகள் முகாமில் இருந்து ஏராளமான அகதிகள் அங்கு திரண்டதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

அப்போது, ​​மரம் விழுந்து இறந்தவரின் உடலை ஏன் பெயர்த்தீர்கள் என்று போலீசாரிடம் கேட்டனர். அவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர். தொடர்ந்து ஆத்தூர் உதவி கலெக்டர் சரண்யா உத்தரவின் பேரில் கெங்கவல்லி தாசில்தார் மற்றும் வருவாய்த்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் பலியான உத்தமசீலன் உடலை போலீசார் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஆத்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து கெங்கவல்லி போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.