குளவி கொட்டுக்கு இலக்கான கர்ப்பிணிகள் உட்பட நான்கு பெண்கள்!

தேயிலை பறித்துக் கொண்டிருந்த நான்கு பெண்கள் குளவி கொட்டுக்கு இலக்காகி பொகவந்தலா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

குறித்த சம்பவம் இன்று (23) பகலில் இடம்பெற்றுள்ளதுடன் கர்ப்பிணிப் பெண்ணும் இதில் ஈடுபட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பொகவந்தலா – பிரிட்வெல் தோட்டத்தைச் சேர்ந்த 4 பெண்கள் குளவி கொட்டுக்கு இலக்காகியுள்ளனர்.

இதேவேளை, கர்ப்பிணிப் பெண்ணுக்கு குளவிகள் அதிகம் கொட்டியதால், அவர் பொகவந்தலா வைத்தியசாலையில் இருந்து டிக்கோயா கிளங்கன் வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளதாக வைத்தியசாலை தகவல்கள் தெரிவிக்கின்றன.