யாழில் இலங்கை வங்கி ஊழியர்கள் மேற்கொள்ளப்பட்ட ஆர்ப்பாட்டம் : வெளியான காரணம்!

யாழில் இலங்கை வங்கி ஊழியர் சங்கத்தினால் கவனயீர்ப்புப் போராட்டம் இன்று முன்னெடுக்கப்பட்டது.

குறித்த போராட்டம் யாழ். வைத்தியசாலை வீதியில் அமைந்துள்ள இலங்கை வங்கிக்கு முன்பாக இன்று பிற்பகல் 1.20 மணியளவில் இடம்பெற்றது.

மேலும், இலங்கை வங்கியைப் பாதுகாப்போம்!, மோசடி முதலாளியை அகற்று!, தடயவியல் தணிக்கை செய்! போன்ற வாசகங்கள் எழுதிய பதாகைகள் ஏந்தியவாறு ஆர்ப்பாட்டம் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.