வவுனியாவில் கிணற்றிலிருந்து மீட்க்கப்பட்ட 26 வயது இளைஞரின் சடலம் !

வவுனியா வடக்கு நெடுங்கேணி பகுதியில் உள்ள கிணற்றில் இருந்து இளைஞரின் சடலம் நேற்று (24) மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இளைஞனின் வீட்டுக் கிணற்றில் இருந்து இளைஞனின் சடலம் மீட்கப்பட்டுள்ளதுடன், இளைஞனின் மரணம் தொடர்பான மேலதிக விசாரணைகளை நெடுங்கேணி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

26 வயதான சந்திரபாலசிங்கம் பிரதாபன் என்பவரே சடலமாக மீட்கப்பட்டுள்ளார்