எரிபொருள் தொடர்பில் வெளியான மகிழ்ச்சித் தகவல்!

அத்தியாவசிய சேவைகளுக்கு அதிக எரிபொருள் ஒதுக்கீட்டை வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இதற்கான நடவடிக்கைகள் முடுக்கிவிடப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது. தேசிய எரிபொருள் அனுமதி முறை தொடர்பான முன்னேற்ற மீளாய்வு கூட்டம் இடம்பெற்றுள்ளதுடன் கடந்த 3 வாரங்களின் தரவுகளை ஒப்பிட்டுப் பார்க்கும் போது வாகனப் பதிவுகள் மற்றும் எரிபொருள் பெறுமதிகள் அதிகரித்துள்ளதாக தெரியவந்துள்ளது.

எவ்வாறாயினும் எரிபொருள் பாவனை குறைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, வாகனம் அல்லாத எரிபொருள் தேவைக்கான சுற்றுலா எரிபொருள் அனுமதிப்பத்திரம் செப்டெம்பர் முதல் வாரத்தில் அறிமுகப்படுத்தப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.