குழந்தைகளின் பசியை போக்க மூன்று கிலோ அரிசியை திருடிய தந்தைக்கு நடந்த சோகம்!

நான்கு நாட்களாக பட்டினியால் வாடும் தனது பிள்ளைகளுக்கு உணவு சமைப்பதற்காக 3 கிலோ அரிசி மற்றும் சிறிய தனியார் உணவுப் பொதியை கொள்ளையடித்த நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கொழும்பு பொரள்ளை பிரதேசத்தில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. தெஹிவாலியைச் சேர்ந்த இரண்டு பிள்ளைகளின் தந்தையான குறித்த நபரே பொரள்ளையில் உள்ள பல் சிறப்பு அங்காடியில் இருந்து இந்த உணவுப் பொருட்களை கொள்ளையடித்துள்ளார்.

பல் விசேட அங்காடியின் பாதுகாப்பு உத்தியோகத்தர்கள் வழங்கிய தகவலின் அடிப்படையில் சந்தேகநபரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

எவ்வாறாயினும், கைது செய்யப்பட்ட நபரை பொரள்ளை பொலிஸ் நிலையத்திற்கு அழைத்துச் சென்று உணவுப் பொருட்களை கொள்ளையடிப்பதற்கான உண்மையான காரணத்தை கூறியதையடுத்து, பொலிசார் பொருட்களுக்கான பணத்தை செலுத்தியதாக தெரிவிக்கப்படுகிறது.

இதனை அடுத்து சந்தேகநபரை பொலிசார் அறிவுரை வழங்கிய பின்னர் விடுவித்தனர்.