யாழில் கணவருடன் மோட்டார் சைக்கிளில் வைத்தியசாலை சென்ற கர்ப்பிணி தவறி விழுந்து மரணம்!!

ஊர்காவத்துறை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட காரைநகர் பொன்னாலை பாலத்தில் இடம்பெற்ற விபத்தில் கர்ப்பிணி பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

சம்பவம் தொடர்பில் விளக்கமளிக்கையில்,

உடனுக்குடன் உண்மை செய்திகளை அறிந்துகொள்ள இங்கே கிளிக் செய்யவும்

யாழ்ப்பாணம் – காரைநகரில் இருந்து மூளாய் வைத்தியசாலைக்கு சிகிச்சைக்காக கணவருடன் பயணித்த பெண் மோட்டார் சைக்கிளில் பின்னால் இருந்து பயணித்தார். காரைநகர் பாலத்தியல் சென்று கொண்டிருந்த போது திடீரென கீழே விழுந்து தலை தரையில் மோதியது.

காரைநகர் சிவகாமி அம்மன் கோயில் பகுதியைச் சேர்ந்த ஜெயந்தன் வேதப்பிரிய என்ற 23 வயதுடைய பெண்ணே உயிரிழந்துள்ளார்.

விபத்து குறித்து உள்ளூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.