யாழில் மீனவர்களின் வாடிகளுக்கு தீ வைப்பு!

கட்டிக்காடு பகுதியில் மீனவர்களின் 4 வாடிகளை இனம் தெரியாத சிலர் வேண்டுமென்றே தீ வைத்து எரித்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

கட்டிக்காடு கடற்கரையில் நேற்று மாலை 6 மணிக்கு மேல் சிலர் இந்த நாச வேலையை செய்துள்ளனர்.

இதனால் மீனவர்களுக்கு 10 லட்சம் ரூபாய்க்கு மேல் நஷ்டம் ஏற்பட்டுள்ளது.

சம்பவம் இடம்பெற்ற போது அப்பகுதியில் உள்ளூர் மீனவர்கள் யாரும் இருக்கவில்லை எனவும் தெரிவிக்கப்படுகின்றது.