கோவில் திருவிழாவில் இரு குழுக்களிடையே மோதல் – 19 வயது இளைஞன் பலி!

ஆலய முன்றலில் இடம்பெற்ற கைகலப்பில் இளைஞர் ஒருவர் கூரிய ஆயுதத்தால் தாக்கி கொல்லப்பட்டுள்ளதாக தகவல் கிடைத்துள்ளது.

இச்சம்பவம் மட்டக்களப்பு கிராமிய பொலிஸ் பிரிவுக்குட்பட்ட வாகனேரியில் கடந்த 25 ஆம் திகதி இரவு இடம்பெற்றுள்ளது.

குளத்துமடு வாகனேரியைச் சேர்ந்த என்.ரமேஸ்காந்தன் (வயது 19) என்பவரே உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதேவேளை, கைகலப்பின் போது காயமடைந்த மேலும் இருவர் வாழைச்சேனை ஆதார வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாக தகவல் கிடைத்துள்ளது.

சம்பவம் தொடர்பான மேலதிக தகவல்கள் வருமாறு:

அப்பகுதியிலுள்ள திரௌபதி அம்மன் ஆலய வருடாந்த உற்சவத்தின் இறுதி நாளான கடந்த 25ஆம் திகதி இரவு தெய்வ வழிபாடு மற்றும் கட்டுவதில் ஏற்பட்ட தகராறு காரணமாக இரு குழுக்களுக்கிடையில் மோதல் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

மேலும், சந்தேக நபர் தலைமறைவாகியுள்ளதால் அவரை கைது செய்யும் நடவடிக்கையில் பொலிஸார் ஈடுபட்டுள்ளனர்.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.