யாழில் பிச்சைக்காரன் வேடத்தில் ஐஸ் போதைப்பொருள் விற்ற நபர் கைது!

ஐஸ் போதைப்பொருள் வர்த்தகத்தில் ஈடுபட்டு வந்த பிச்சைக்காரர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதுடன், அவரது சகோதரியின் வீட்டில் பெருமளவு பணம் கைப்பற்றப்பட்டுள்ளது.

நேற்று (26) கிருலப்பனை பிரதேசத்தில் ஐஸ் போதைப்பொருள் கடத்தலில் நபர் ஒருவர் ஈடுபடுவதாக கிடைத்த தகவலின் அடிப்படையில் பொலிஸார் இந்த சுற்றிவளைப்பை மேற்கொண்டுள்ளனர்.

போலீசார் அங்கு சோதனை நடத்தியதில், சம்பந்தப்பட்ட நபரிடம் ஐஸ் போதைப்பொருள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. பின்னர், வீட்டில் இருந்த பணம் குறித்து சந்தேகமடைந்த அவரது சகோதரி ஒருவரிடம் கேட்டபோது,

பிச்சை எடுத்து சம்பாதித்த பணம் என்றார்.