சற்று முன்னர் க.பொ.த உயர்தர பரீட்சை பெறுபேறுகள் வெளியாகின!

கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சை முடிவுகள் சற்று முன்னர் வெளியிடப்பட்டுள்ளன.

2021ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சைகள் கடந்த பெப்ரவரி மாதம் நடைபெற்றன.

இந்தப் பரீட்சை முடிவுகளுக்கான  பெறுபேறுகள் சற்றுமுன்னர் வெளியிடப்பட்டுள்ளதாக பரீட்சை திணைக்களம் அறிவித்துள்ளது.

பரீட்சை திணைக்களத்தின் www.doenets.lk என்ற இணையத்தளத்தின் ஊடாக பெறுபேறுகளை அறிந்துகொள்ள முடியும் என பரீட்சை திணைக்களம் தெரிவித்துள்ளது.